உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற அன்ஷூ மாலிக் மற்றும் வெண்கல வீராங்கனை சரிதாவுக்கு டெல்லியில் வரவேற்பு..!

0 2175

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீராங்கனைகள் அன்ஷு மாலிக், சரிதா மோர் ஆகியோருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக், தாம் காயம் அடைந்ததால் தங்கப்பதக்கத்தைத் தவற விட்டதாகக் கூறினார்.

வெண்கலப் பதக்கத்துடன் டெல்லி திரும்பிய சரிதா மோர், தனது பலவீனங்களைப் புரிந்துக் கொண்டு அடுத்து வரும் போட்டிகளுக்கு கடுமையான பயிற்சி மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்தார்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments